அசர மாட்டேன்!

தோல்விகளைத் தோள்களில் சுமந்து

தோற்றுப் போனவன்தான்! – நான்

தொய்வடைய மாட்டேன்! தொடர்வேன்!

ஒருநாள் என்னை

தோற்கடித்த தோல்வியைத்

தோற்கடித்து வெற்றியைத்

தோள்களில் மாலையாக

அணிவேன்! அதுவரை அசர மாட்டேன்!

அணைய மாட்டேன்! அடங்க மாட்டேன்!

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

One Reply to “அசர மாட்டேன்!”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.