உதிர்ந்த ஹைக்கூ

கேட்காத காதுகளிடம்

கேட்டுக் கொண்டிருந்தான்

வேண்டுதல்

தூறல் பொய்கை

என்னை நனைத்துக் கொள்கிறது

மழை

விரிந்து கிடக்கிறது நாழிகை

மடித்து வைக்க ஆசை

கலைத்து விடுகிறது அடுத்த வினாடி

என்னை யாராவது

இறக்கிவிடுங்கள்

சிலுவையில் அறைந்த இயேசு

விடிந்து நேரமானாலும்

காதலி எழும்பவில்லை

கல்லறையை விட்டு

காகிதம்

கொஞ்சம் அழுக்கானது

கவிதையால்

கடனால் விஷ உணவை

உருட்டும் பொழுது

அனிச்சையாய் கை நீட்டியது குழந்தை

அவளால் உயர பறக்க

முடியவில்லை

சிறகில் கட்டிய தாலி

ஜன்னல் ஓரம்

சாரல் காற்று

எவனோ துப்பிய எச்சில்

தினமும் குப்பை கிடங்கில்

எட்டி பார்த்தேன்

குழந்தை கிடக்குதா என்று

மு.தனஞ்செழியன்
8778998348

14 Replies to “உதிர்ந்த ஹைக்கூ”

  1. வார்த்தைகளால் கோர்க்கப்பட்டு உணர்வுகளால் கட்டப்பட்டுள்ளது உதிர்ந்த ஹைக்கூ.

    அனைத்து வரிகளும் வலிமை; அருமை.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

  2. ஹைக்கூ வசமான வார்த்தைகளால் நிறைந்த கட்டமைப்பை க் கொண்டு சிலிர்த்து நிற்கிறது. கூடுமான அனைத்தும் பொருளால் ஹைக்கூவை தலை தூக்கி நடனம் ஆட வைத்திருக்கிறது.

  3. ஹைக்கூ அனைத்தும் சிறப்பு தனா தோழர்.

    அனிச்சையாக நீட்டிய கையும், சிறகில் கட்டிய தாலியும் அருமை குக்கூ…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.