எரியும் விளக்கைத் தூண்டும் முறை

விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத்திரியின் கசடை தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.

விளக்கு திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.