குற்றாலம் வாங்க

சாரலிலே நனையலாமா – பறவைகளின்

சங்கீதம் கேட்கலாமா?

தூரலிலே நனைந்து – தலை

துவட்டாமல் திரியலாமா?

 

தீராத நோய் தீர்க்கும் – பொதிகைமலை

தேனருவி கொட்டலாமா?

சீராக பாய்ந்து வரும் – செண்பக

அருவி தேடி போகலாமா?

 

நேராக தாண்டி நம்மை – நடக்கும்

குரங்குகளை ரசிக்கலாமா?

ஏறாத மலையிலேறி – தென்றல்

மேனி தவழலாமா?

 

ஓராயிரம் மனக்கவலை – நமக்கென்றே

இருந்தாலும் போக்கிடவே

ஆரவாரம் செஞ்சு பாயும்

ஐந்தருவி தேடலாமா?

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.