சீரடி நோக்கி ஓரடி வச்சா
பெருகும் நன்மை புரிஞ்சுக்கோ…
நேரடியா நீ பாபாவை நினைச்சா
நன்மைகள் பெருகும் தெரிஞ்சுக்கோ…
பாரடி பெண்ணே பாபாவின் புகழை
பாடியே செல்வம் பெருக்கிக்கோ….
கூறடி நாவால் பாபாவின் பெருமை
கூடிடும் நலமே தெரிஞ்சுக்கோ….
ஏறுமடி செல்வம் வாழ்கையிலே
இனிய பாபாவின் அருளாலே… ..
ஊருக்குள் பாபாவின் கோவில் வைத்தால்
ஊரும்செழித்து வாழுமடி….
ஆறாத நோயெல்லாம் ஆற்றிடவே
அண்ணலாம் பாபாவை பாடுங்கடி
சேரும் நன்மைகள் தங்கிடவே
சிந்தையில் பாபாவை எண்ணுங்கடி…
தாயடி பாபா நமெக்கெல்லாம்
தந்தையும் அவர் தானடியே…
காயங்கள் ஆற்றிட சீரடி மன்னன்
கருணை நமக்கு வேண்டுமடி…
தீயவை தம்மை தீக்கிரையாக்கிட
தேடிடனும் பாபா காலடியை..
பாயும் ஒளியால் வாழ்வு சிறக்க
பாபாவை நாளும் பாடனுமடி
செந்தூர்கவி