சுகிக்கும் பிரபஞ்சம்

தொன்மையில் இருந்த

பிடிமானமற்ற வானவெளியிலிருந்து

மழைத்துளிகள் இட்ட முத்தங்களால்

வெள்ளமெனப் பாய்ந்து

பெருமிதம் கொண்டது பூமியின்

கருவறை மனம்…

தாவர வேர்களை நனைத்தது போல்

உயிர் வேரை நனைத்ததில்

அன்றலர்ந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது பிரமாண்டம்…

முட்டையின் புறத்தில் நின்று

அகத்துள் புக

எத்தனிக்கும் ஆதியின் கதவு திறக்க

முயன்று தோற்காமல் தொடருகிறது

ஜனனம்….

அரூப வெளியில்

ரூபகங்ளைச் சுமந்து சுற்றி

முனை காண முயன்று தோற்ற போது

முளைத்து அரும்புகிறது வெற்றியின் நுனி…

வெல்லுவதாய் விரிந்து

துவளும் இயலாமையின் நகர்தல்

காற்றும் ஒளியாயும்

இருளில் மின்னுகின்றன நட்சந்திரங்கள்…

சுழலுவதில்

கைப்பிடித்து தொடரும்

அறிதலும் அறியாமையும்….

பகரருதலில்

பங்களிப்பானின்றி அன்னோன்யமாய்

பிணைந்து அடர்த்தியற்று

தளறும் இறுக்கத்தில் முட்டி மோதுகிறது

ஆரம்பம் தெரியா துவக்கதின் முதல்…

சொல்லி முடியாமல்

விரிந்து சுகந்து கிடக்கிறது

பிரபஞ்சம்…

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

One Reply to “சுகிக்கும் பிரபஞ்சம்”

  1. வாய்ப்பே இல்லை. அரூப ரீதியான பிரபஞ்ச வெளி கவிதை உள்ளம் புகுந்து, தெளிந்து, ஆழம் கண்டு, ஒன்றின் மேல் ஏறி மற்றொன்று வெற்றி திரும்பும் திசை எங்கும் என் மூச்சுக்காற்று உலாவ விட்டு திரும்பிப் பார்க்கிறேன். உங்கள் நளினம், உங்கள் வார்த்தைகள் என்னோடு வைத்துக் கொண்டிருக்கின்றன உறவுகளை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.