நழுவும் நாடக வாழ்வில் – கவிதை

நல்ல காலம் சென்றது

நன்றி கெடும் நிலை வந்தது

நயவஞ்சகம் மேலே நிற்குது

நம்பி நம்பி உதவி செய்தது

நம்மையே உதறித் தள்ளுது

நல்மனம் நகர்ந்து போகுது

நடுவில் தீமை தீமூட்டுது

நன்மை அதில் பற்றி எரியுது

நழுவும் நாடக வாழ்வில்

நன்றி குறையுது தினம்தினம்

நசுங்கும் காலம் போல்

நன்றி மறையுது

உய்வில்லை நன்றி கொன்றார்க்கு

உள்ளத்தில் அதை நீ வை

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

One Reply to “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”

  1. உலகமே நாடக மேடை என்று சொன்னாலும்.
    நாடகத்தையே வாழ்க்கையாக
    கொண்ட கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது.

    இந்தக்கவிதையை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாழ்த்துக்கள்…!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.