நாண் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மைதா : 500 கிராம் (8 நாண்)

ஈஸ்ட் : ¼ தேக்கரண்டி (வெதுவெதுப்பான சீனி சேர்த்த தண்ணீர் கலந்து 8 நிமிடம் வைத்து இருக்கவும்.

வெண்ணெய் : 1 தேக்கரண்டி

உப்பு : 1 தேக்கரண்டி

 

செய்முறை

மைதாவைச் சலித்து பாத்திரத்தில் போடவும். வெண்ணெய், உப்பு, ஈஸ்ட் தண்ணீர் இவற்றைச் சேர்த்து ஒன்று சேரப் பிசையவும்.

பின் தேவையான அளவு பூரி மாவு மாதிரி இருக்கும் படி தண்ணீர் சோத்து ஈரத் துணி போட்டு மூடி தனியே 3 – 4 மணி நேரம் அடுப்புச்சூடு அல்லது எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால் மாவு நன்கு ரொட்டி மாதிரி எழும்பி விடும்.

அந்த மாவை புரோட்டா அளவு பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கனமானப் பலகையில் நீண்ட வட்ட முட்டை வடிவில் இட்டு, தோசைக்கல்லில் போட்டு சப்பாத்தி மாதிரி எடுக்கலாம் அல்லது தந்தூரி அடுப்பிலும் போட்டு எடுக்கலாம்.சுவையான நாண் ரெடி.