பால் பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 100 கிராம்
உளுந்து : 75 கிராம்
பசும்பால் : 200 கிராம்
தேங்காய் பால் : ஒரு டம்ளர்
சர்க்கரை : 100 கிராம்
ஏலக்காய் பொடி : சிறிதளவு
பொரிக்க எண்ணெய் : தேவையான அளவு

 

செய்முறை

பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும். இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். வெள்ளை நியமாக பொறித்து எடுக்கவும்.

பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும், சுவையான பால் பணியாரம் ரெடி!

பால் செய்முறை

பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.