அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி
எல்லாமே நடக்கும் நல்லதம்மா
சும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது
சூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா
கம்மாக்கரையில பூத்திருக்கும் கண்ணுப்பீளை
காயாத மஞ்சள்செடி காத்திருக்கும் நம்மளோட
கும்பலா கட்டிவச்ச செங்கரும்பும் தோகையோட
கூடி நாம கொண்டாட பொங்குதே பொங்கலம்மா
பம்பரம்போல மண்டையோட பனங்கிழங்கு வந்திருச்சு
பாசத்தோட பெருத்திருக்கும் பூசணிக்காய் இருக்கு
செம்மண்ணு கோலத்துல வாசலுமே செவந்திருக்கு
சேறையெல்லாம் சோறாக்கி பொங்கல் இப்போ பொங்கிருச்சு
நம்மவீட்டுக் காளையோட கொம்பெல்லாம் வண்ணமாச்சு
நட்டநடு வீதியில ஊரும் இப்ப கூடியாச்சு
கொம்பில்லா காளை நம்ம வீரம் காட்டும் நேரமாச்சு
கூட்டத்தில அத்தைபொண்ணை தேடிக்கண்ணும் ஓடலாச்சு
அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி
எல்லாமே நடக்கும் நல்லதம்மா
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942