விபூதி வாங்கும் முறை

கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.

வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.

விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி எடுத்துத் தரித்தல் கூடாது.

வலக்கையில் பெற்றுக் கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் தரிப்பது நலம்.

அவ்விதம் செய்ய இயலாவிட்டால், ஒரு சிறுதாளில் விபூதியை இட்டு, அதிலிருந்து எடுத்துத் தரிக்கலாம்.

வயதில் நம்மைவிட இளையவர் கைகளிலிருந்து விபூதி எடுத்துத் தரிக்கக் கூடாது.

விபூதியை நம் கையில் இடச் செய்து, அதிலிருந்துதான் எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.

குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்துத் தரிப்பதில் தவறில்லை.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.