ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
இணைய இதழ்
ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
“தாமர”
“எஸ் மேடம்”
“குப்புராஜ் நகர்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்னு சொல்லியிருக்கேன் இல்லையா?”
“ஆமா மேடம். தையல் கடை நடத்தறாங்கன்னு”
“ஆமா, அங்க போ. என்னவோ பிரச்சனை. மீட்டிங்கல இருக்கேன்.”
“ஒகே மேடம். உடனே கெளம்பிடறேன்.”
“டூட்டி எப்ப?”
“முடிச்சுட்டு இப்பதான் மேடம் வந்தேன். இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.”
“அடடா, சாரி தாமர. நான் வேற ஆள.”
Continue reading “மிருக வதை – சிறுகதை”கொசுக்கடிக்கு
புரண்டு படுக்கையில்
மகளின்
இறுக்கம் தளர்ந்ததால்
சினுங்கியது பொம்மை
பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.
மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.
தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.
என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.
Continue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!
அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்