ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்

நெற்களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவுக் களஞ்சியம் என்று கூறுவார்கள். இவை எண்ண முடியாதவை; கணித்துக் கூற முடியாதவை. அளவில், ஆற்றலில், சிறப்பில் அதிகமான அளவில் இருக்கக்கூடியவற்றை நாம் ”களஞ்சியம்” என்று கூறுகிறோம்.

 இணையதளங்களில்,  அனைத்தும் கலந்த மாபெரும் களஞ்சியமாக வெளிப்பட்டு நிற்பது ” ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்”  எனும் இணையதளம் ஆகும்.

Continue reading “ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்”

காலம் போற்றும் கவிஞர்கள்

கண்ணதாசன்

மனிதன் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தப் பயன்பட்டது மொழி ஆகும். எழுத்து மொழி, பேச்சு மொழி, செயல் மொழி என்று மொழியாளர்களும் மற்றும் ஒலியின் அளவை வைத்து அதை 1 மாத்திரை, 1/2 மாத்திரை என்று ஒலியிலாளர்களும் கூறுவதாக மொழி வரலாறு கூறுகிறது.

உலகில் உள்ள மொழிகளையெல்லாம்

உயர்வால் நானும் மதிக்கின்றேன்

தலைமைத் தன்மையை அவரவர் மொழிக்கு

சாற்றுபவர் தம்மைத் துதிக்கின்றேன்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நான் வாசித்த கவிஞர் உலகநாதனின் வரிகள் ஆகும்.

Continue reading “காலம் போற்றும் கவிஞர்கள்”

யாவரும்.காம் – புது யுகத்தின் முகம்

யாவரும்.காம்

‌இலக்கியம் எழுதிப் பழகவோ, அறிந்து ரசிக்கவோ, திறனைக் காட்டித் தன்னை உலகறியச் செய்யவோ, பிறதின் உயரமறியவோ, அவ்வுயரம் தாண்டவோ பெரிதும் உதவும் நாற்றங்கால் தான் யாவரும்.காம்.

மேன்மையான படைப்புகள், தரமான படைப்புகள், சிறப்பான படைப்புகள், உன்னதமான படைப்புகள் என எதனையெல்லாம் சொல்கிறோமோ, அவையனைத்தும் எழுதப்படும் இடமாக இந்த இணையதளம் உள்ளது.

யாவரும்.காம் முகப்பு பகுதியில் இந்த மாதத்திற்கான இதழினுடைய படைப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Continue reading “யாவரும்.காம் – புது யுகத்தின் முகம்”

காற்றுவெளி – கலை இலக்கிய இதழ்

காற்றுவெளி

காற்றுவெளி என்ற கலை இலக்கிய இதழ், எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களின் பெருமுயற்சியால், சோபா அவர்கள் ஆசிரியராக இருந்து 09-ஜூன்-2010 அன்று லண்டனில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் புகழேந்தி என்பவரும், ஜெர்மனியில் மூனா என்பவரும் இவ்விதழ் நடைபெற அனைத்துப் பணிகளையும் செய்து உதவினர்.

மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம்.

Continue reading “காற்றுவெளி – கலை இலக்கிய இதழ்”

கனலி – கலை இலக்கிய இணைய இதழ்

கனலி

‘கனலி’ கலை இலக்கிய இணைய இதழ், டிசம்பர் 2019-ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2021-க்குள்  பன்னிரெண்டு இதழ்கள் மட்டுமே வெளி வந்திருக்கும் இதழ். இவ்விதழ் ஆழமும் அகலமும் அடர்த்தியும் மிக்கதான தமிழின் மிக முக்கியமான இணைய மாத இதழாகும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் கண்டுணர வேண்டும் என்றால், படிக்க வேண்டிய இதழ் இவ்விதழாகும். அற்புதமான மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல்கள், தேடிப் படிக்க உகந்தவைகள் நிறைய உள்ளன.

நவீனத்தை நோக்கிய இளைஞர்களுக்கான இலக்கிய முதிர்ச்சிக்கு, முயற்சிக்கு வித்திடும் இக்காலத்திற்கான இணையதளம் கனலி இணையதளம் ஆகும்.

Continue reading “கனலி – கலை இலக்கிய இணைய இதழ்”