ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல்
ஒன்றாய் உலகத்தில் வாழ்ந்திடுவோம்!
என் வாழ்க்கை என் பாடம் – காந்தி
எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.
பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
– திருக்குறள்
வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்
எத்தனை விறகுகள் எரிந்தனவோ
விடுதலைப் பருக்கைகள் வேகுதற்கே
எத்தனைக் கனவுகள் கலைந்தனவோ
இத்தரை விடியலில் எழுவதற்கே
எத்தனை விளக்குகள் அணைந்தனவோ
இத்தரை ஒளியினில் சுடர்வதற்கே
எத்தனை உயிர் மாய்ந்தனவோ
இத்தரை உணர்வினைக் காப்பதற்கே
போகிப் பண்டிகை – கவிதை
ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை
சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…
இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…
வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!
பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு