“ஐயா, ஐயா” என்று வாசலுக்கு வெளியில் நின்று கூப்பிட்டான் சண்முகம்.
“யாரு தம்பி?” என்றபடி வெளியே வந்தார் குமரைய்யா.
“நான் சண்முகம், மேலத்தெரு பரஞ்சோதி மகன்.”
“என்னப்பா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”
“எல்லாரும் நல்லாயிருக்காங்கய்யா.”
“உள்ளே போகலாம் வா” என்றபடி உள்ளே சென்றார். வீட்டிற்குள்ளிருந்த சோபாவில் அமர்ந்தனர்.