விவசாயி எதை இழந்தான்?

உரிமையை இழந்த விவசாயி

விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)

பாடலின் பொருள்

எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?

அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?

வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?

இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.

ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.

இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.

இன்று இருப்பதோ அவல நிலை.

Continue reading “விவசாயி எதை இழந்தான்?”

ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்

ஏரி
ஏரி நீர் சேமிப்பின் முக்கிய அங்கம். நம் முன்னோர்கள் காலத்தில் ஏரிகள் எப்படி இருந்தன என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலம் தொட்டு நீர்நிலைகள் மற்றும் வேளாண்மை என்பன இன்றியமையாதவையாக இருந்துள்ளன.

பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் பண்டைய நாகரிகம் பரந்திருக்கக் காண்கின்றோம். மனிதர்கள் முதலில் ஆற்றை மட்டும் சார்ந்து இருந்துள்ளனர். பிறகு நீர்நிலைகள், குட்டைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டு அதன் வழியே பாசனம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மூலம் பாசனம் வந்தது, குட்டைகளில் இருந்து ஏற்றம் மூலம் பாசனம் செய்யப்பட்டது.

Continue reading “ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்”

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

நான் நெல் விதைத்த விளைநிலம் எல்லாம்

இன்று வேலி அமைத்து வீடுகட்ட காத்திருக்கிறது

நான் குதித்து விளையாடிய குளங்களும் கிணறுகளும்

வற்றிப் போய் வானத்திடம் மழைக்காக வாதாடுகின்றன‌

Continue reading “அழிந்து கொண்டே போகிறது என் உலகம்”

புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு

விவசாயி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு

தீமை விளைவிக்கும் – 58% (11 வாக்குகள்)

நன்மை தரும் – 42% (8 வாக்குகள்)

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
Continue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”