நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

நீர் பொழுதுபோக்கு

மீன் தொட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கநிற மீன்களும், கருப்புநிற மீன்களும் ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தன.

சிறுமீன்கள் தொட்டியின் அடிப்பாகத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சிறு கற்களுக்கிடையே அவ்வப்பொழுது பதுங்கியிருந்து, பின்னர் மீண்டும் மேலெழுந்து திரிந்தன.

ஒருவேளை அவைகள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனவோ? என்னவோ! தெரியவில்லை.

ஆனால் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

Continue reading “நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39”

கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16

கடல் நீர்

பல ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் கடற்கரைக்கு வந்தேன். மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கடலின் அழகை இரசித்துக் கொண்டிருந்தேன்.

கடற்காற்று ஓயாது வீசிக் கொண்டிருந்ததால், மதிய வெயிலின் தாக்கத்தைச் சற்றும் உணரவில்லை.

தூரத்தில் கடலில் தோன்றிய சிறிய அலை கடற்கரையை நெருங்க நெருங்க பெரிதானது. மாற்றாக, ஆர்ப்பரித்து வந்த பெரிய அலை, கடற்கரையை தொடும் பொழுது சிறிதானது.

அடுத்தடுத்து வந்த அலைகளின் ஓயாத விளையாட்டைக் கண்டு வியந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து சற்று முன்னோக்கி நடந்து சென்று கரை ஒட்டில் நின்றேன். அலைகள் வந்து எனது கால்களை நனைத்தன. அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

“சந்தோஷமா…?” என்ற குரல் கேட்டது.

“யாரு….?” என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.

Continue reading “கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16”

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

உவர் நீர்

நாளை திங்கட்கிழமை.

‘நீர் தொழில்நுட்பவியல்’ குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, நீரில் இருந்து உப்புக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

“வேலையா இருக்கியா? தண்ணி லாரி வந்திருக்கு. இரண்டு குடம் மட்டும் புடிச்சிட்டு வர்றீயா?” என்று அம்மா கேட்டார்.

“தோ, வர்றேன் மா” என்று கூறி விரைந்து சென்றேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்”

பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்

பவளப் பாறைகள்

பவளப் பாறைகள் கடலின் அடிப்பரப்பில் காணப்படும் அழகான சூழலமைப்பு ஆகும். இவை கடலடித் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்வகை உயிர்சூழல் உருவாகவும், அவை பாதுகாப்பாக இருக்கவும் இவை மிகவும் அவசியமானவை.

இவை மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில், தேன்கூடு, மரம், மாபெரும் விசிறிகள், மூளை, மான் கொம்புகள் போன்ற வடிவங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

Continue reading “பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்”

களிப்பூட்டும் கடற்கரை

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்

காற்று தரும்சுகம் நாடிடுவோம்

படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி

பறந்திட உடல்வளம் கூடிடுவோம்

Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”