சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம்
எதிலிருந்தும் தொடங்குகிறன.
புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த
நச்சரிப்பில் அடி நாளங்கள் கூசுகின்றன.
எரிமலையின் வெடிப்பை
வார்த்தைகளாக்கி வதம் செய்கின்றாய் சுகமாய்.
சாகாவரம் பெற்ற மலைகளை மடுவாக்குகின்றாய்.
அற்பப் பதரென ஊற்றுப் பெருவெள்ளத்தை உதறித் தள்ளுகிறாய்.
அலமார்ந்து சுருங்கி விடுகின்றேன் ஆமையாய்.
நீ- என்னுடன் போராடாதே…
உழுவை மீனாய்
வழுவிச் செல்ல முடியா கழுதை நான்.
எனக்குள்ளேயே இருந்து எனையே அழிக்கும்
ஆட்டத்தை
எனக்குள்ளிருக்கும் என் மனமே
எப்போது விடுவதாக உத்தேசம்?
பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
என்னை போல் இருக்கும் கல்லை கடவுள் என்றார்கள் நான் ‘மனம்’ என்றேன்.
நல்லதொரு கவிதை மனம் படைக்கச் சொல்லியது மனதை பற்றியே.
மு தனஞ்செழியன்.